Posts

Showing posts from June, 2021

மனம் விட்டுப் பேசுங்கள்.*

Image
*மனம் விட்டுப் பேசுங்கள்.* உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன.. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள்.. போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா? ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான். விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர். வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்...

மீண்டும் மீட்டிப்பார்

Image
 

நினைவுகள்...

Image
 

ஊர்ந்து கொண்டிருந்தது.

Image
 ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில்  ஊர்ந்து கொண்டிருந்தது.  அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில்  பிடித்து விட்டது.  பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .  குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது. கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம்  கூடி வந்து விட்டன. ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை. ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .  இது கொத்துனா உடனே மரணந்தான்.  குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது.  என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன . தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு  விட்ட சூழ்நிலையின் வேதனை  எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு  மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.  ஐயோ. புத்தி கெட்டுப் போய்  நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே. குரங்கு பெரிதாய்க் கு...

Work from Home Part time -- online work

Image
 Work from Home Part time -- online work 🛑தேவையானது Data connection and Smart phone only. 🛑Rs 1500/= Service Charge வழங்கி  மாதம் ஒன்றுக்கு Rs 50,000/= க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு. 🛑இந்த App மூலம்  நீங்கள் என்ன செய்ய முடியும்? அனைத்து வலையமைக்குமான Reloads , Bill Payments,மின்சாரம், நீர், தொலைபேசி பில், இணைய பில், TV Bill, Insurance Bill உள்ளிட்ட பல சேவைகள் உங்கள் விரல் நுனியில் உள்ளன. உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள பயன்பாட்டின் மூலம் அதை நீங்களே செய்யலாம். இதற்கு பின்வருமாறு கமிஷன் கிடைக்கின்றது. 🛑நாம் எவ்வாறு வருமானம் பெறுகிறோம் ...   மொபிடெல் - 4% எடிசலாட் - 4% ஹட்ச் - 4% ஏர்டெல் - 4% டயலொக் - 2%  இவ்வாறு கமிஷன் கிடைக்கும்   🛑இது மட்டுமா? இல்லை இல்லை.  இரண்டாவதாக, இந்த சேவையை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வருவாய் ஈட்ட முடியும்.  நிலை 08 நிலை வரை செலுத்தப்படுகிறது. ⛔நிலை 01 = ரூ. 300 (நீங்கள் நேரடியாக அறிமுகப்படுத்தியவர்களுக்கு) ⛔நிலை 02 = ரூ. 200 (Level01 ஐ அறிமுகப்படுத்தியவர்களுக்கு) ⛔நிலை 03 = ரூ. 100 (Level02 ஐ அறிமுகப்படுத்தியவர்களு...

ஒரு பெண்ணின் உள்ளகுமுறல்

Image
 *# ஒரு பெண்ணின் உள்ளகுமுறல்#* சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை...  எது மேட்டர் தெரியுமா?  *சமைக்குறது தான்* இன்னைக்கு சமைக்குறது; அப்புறம் நாளைக்கு சமைக்குறது; அப்புறம் நாளன்னைக்கு சமைக்குறது; சமைச்சுக் கிட்டே இருக்குறது. ஒவ்வொரு நாளும் சமைக்கனும், நேத்து சமைச்ச மாதிரி இல்லாம இன்னிக்கு சமைக்கனும், புதுசு புதுசா சமைக்கனும், ருசியா சமைக்கனும், அது எல்லார்க்குமே பிடிக்கனும், உப்பு கூடிடக் கூடாது, சோறு குழைஞ்சிடக் கூடாது, பிடிக்காத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது,  ஒவ்வாத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது,  இருக்குற பொருள்களை வச்சு அட்ஜஸ்ட் பண்ணனும்..  வேஸ்ட் பண்ணிடக் கூடாது. இருக்குற காச வச்சு சமைக்கனும்.  பட்ஜெட் இடிச்சிடக் கூடாது.  ஒவ்வொரு நாளும் விடியுறப்போ, இன்னைக்கு என்ன வாங்கலாம், என்ன சமைக்கலாம், வீட்டில என்ன இருக்கு, வீட்டில என்ன இல்லன்னு யோசிச்சே  விடியும். சாப்பிட்டு முடிச்சதும் பாத்திரம் கழுவி வைக்கனும்.  இதையே ஒரு நாளைக்கு நாலு தடவை பண்ணனும். பகல் சமைச்சத கழுவுறப்போ திரும்ப இரவுக்கும் இதையே பண்ணனுமேன்னு மனசுல யோசிக்கும். நாளைக்கும் ம...

நடத்தையில்_தெளிவுவேண்டும்

Image
  # நடத்தையில்_தெளிவுவேண்டும் ...!!! ★முழுவதும் படித்துவிட்டு, விடுபட்ட முக்கியமான விடயங்களை கமெண்ட் பண்ணுங்க...!!★ 1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..(பண்ணவும் நினைக்காதீர்) 2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர் ... 3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ... 4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் ... 5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் .... குறிப்பாக பொது இடம்,சிக்னல் 6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ... அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ... அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள் ... 7. கடனைத் திருப்ப...

இன்றைய_நவீன_யுக_மனைவியின் #மனைவியை_மயக்க

Image
# இன்றைய_நவீன_யுக_மனைவியின் #மனைவியை_மயக்க. என் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல.  #மதியுங்கள்  வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள். #கனவுகளை_பின்பற்றட்டும் உங்களை அல்லஇன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.  #எல்லை_தாண்டிச்_சிந்தியுங்கள் மனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக் கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள். #உணர்வுகளை_வெளிபடுத்துங்கள் ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிபடுத்தும் உணர்வுபூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக...

ஒரு வைத்தியர் மிக அவசரமா ஓடி

Image
 ஒரு வைத்தியர் மிக அவசரமா ஓடி வந்து ஆப்ரேஷன் அறைக்குள் நுழைந்து ஆடைகளை மாற்றிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தார்.....  அங்கு பிள்ளையின் அப்பா மிகவும் கோபத்துடன் இவ்வளவு லேட்டாவா வருவீங்க என் பிள்ளைக்கு என்னவானாலும் நடந்தா யார் பொறுப்பு என்று காரசாரமாக பேசினார்...  வைத்தியர் : சிரித்த முகத்துடன் கூறினார் எனக்கு வைத்தியசாலையில் இருந்து call வந்தது அவசரமாக ஓடி வந்துட்டேன்... பொறுமையாக இருங்கள் உங்கள் மகன் இறக்கவில்லை.. நான் வந்துவிட்டேன் பார்த்துக்கொள்கிறேன் என்றார்..  ஆமாம் சொல்விர்கள் உங்கள் மகனுக்கு இப்படி ஒன்று நடந்தால் இப்படி லேட்டா வந்து இப்படியெல்லாம் பேசுவீங்களா எண்டார் பிள்ளையின் தகப்பனார்..  Dr சொன்னார். புன்னகையுடன் பொறுமையாக இருங்கள் நான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆபரேஷன் ரூம்க்கு சென்று சில மணித்தியாலங்கள் கழித்து வெளியே வந்து உங்கள் மகன் மிக்க நலமாக உள்ளார்.. மேலதிக விடயங்களை nurse இடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவசரமாக புறப்பட்டு சென்றார்....  அவ்விடம் வந்த nurse இடம் தகப்பனார் பிள்ளை தொடர்பில் கேட்டுவிட்டு Dr.ஏன் அவசரமா போகிற...