வாழ்ந்து காட்டுவோம்

வாழ்ந்து கட்டுவோம்



● *பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து

முளைத்துக் காட்டுகிறது.


● ஒவ்வொரு நாளும்

காட்டில் சிங்கத்தால்

கொல்லப்படுகின்ற நிலையில்

உயிர் வாழும் மான் கூட

பிரச்சனைகளை சமாளிக்கின்றது.



● பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன.



● மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும்

நிமிர்ந்து நிற்கின்றன.


● ஒவ்வொரு நாளும்

ஆகாரத்திற்காக பல மைல்கள்

தூரம் பறந்தாக வேண்டிய

பறவைகளும் மனம் சலிப்படையாமல்

முயற்சி செய்கின்றன.


● சிறியதான உடலையும்,

பல கஷ்டங்களையும்

சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும்

எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன.


● தண்ணீரே இல்லாத

பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன.


● ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும்,அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன.


● இப்படிப் பல கோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் நம்மால் வாழ முடியாதா..?


● எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை.


● அதை ஏன் புலம்பிக் கொண்டு வாழ வேண்டும்?


● அதை ஏன் வெறுத்துக் கொண்டு வாழ வேண்டும்?


● அதை ஏன் தப்பிக்கப்

பார்க்க வேண்டும்?


● அதை ஏன் அழுது கொண்டு

வாழ வேண்டும்?


● மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்ந்து தான் பார்ப்போமே.


● இது உன் வாழ்க்கை என்ற போது

மிச்சம் இருப்பது ஆனந்தத்தைத்

தவிர வேற என்ன இருக்கிறது.


● ஆகவே,..ஆனந்தமாக வாழ்வோம்,வாழ்ந்து காட்டுவோம்.உலகுக்கு ஒரு சான்றாக.


Comments

Popular posts from this blog

வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும்!

ஊர்ந்து கொண்டிருந்தது.