Posts
Showing posts from February, 2021
நானும் நடைபோடுகிறேன்*
- Get link
- X
- Other Apps
*நானும் நடைபோடுகிறேன்* விடை தெரியா வினாக்களுடன் விதியின் வழியை எண்ணி விளையாட்டுப் பிள்ளை போல் வீரமாய் நடை போடுகிறேன்...!! இறந்த கால இன்னல்களை இம் மண்ணோடு புதைத்து விட்டு இயற்கையாய் புன்னகையை என்னோடு அணிந்து விட்டு இறைவனின் நாட்டம் எண்ணி இறை நன்றியோடு நடைபோடுகிறேன்...!! எதிர் வரும் காலங்கள் என் கண்களுக்கு விருந்தளிக்க எனக்கிருக்கும் காலத்தை என் எண்ணம் போல் காய் நகர்த்தி என் எதிர் கால கனவுகளை எனக்கேற்றாற் போல் மாற்றிடவே நல் மதி கொண்டு நானும் நடைபோடுகிறேன்...!! நடந்து முடிந்த நினைவுகளை நந்நூல் போல் நினைவில் கொண்டு நடக்க இருக்கும் நிகழ்வுகளை நன்றியோடு ஏற்பதற்கு நடைபோடுகிறேன் நல் வரமாய் ஏற்றுக் கொண்டு...!! விடை தெரியா பக்கங்களை விடைகளினால் நிரப்புவதற்காய் விதியின் வழி தேடி விரைகின்றேன் வரும் விமர்சனத்தை பாராது....
இயற்கையை காப்போம்!
- Get link
- X
- Other Apps
இயற்கையை காப்போம்! 'புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையால் காணப் படும்' என்ற வள்ளுவன் குறளுக்கு ஏற்ப துாய்மை என்பது நமக்கு மிகவும் அவசியம். புறந்துாய்மையான சுற்றுச்சூழல் துாய்மை மிகவும் முக்கியமாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய-, மாநில அரசுகள் பல திட்டங்களை வகுத்து கொடுத்தாலும் அதை முறையாக பின்பற்றுவது சமூகத்தின் கடமை 1976ம் ஆண்டு 42-வது சட்டதிருத்தத்தின்படி மனித கடமைகளின் ஒன்று சுற்றுச்சூழலை பாதுகாப்பது. 'இந்திய குடிமக்கள் அனைவரும் காடுகள், ஏரிகள், கடல்கள், ஆறுகள், வனவிலங்குகள் போன்ற இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும்' என்பது தலையாய கடமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் இந்த ஐந்தை சுற்றி தான் சுற்றுச் சூழல் செயல்படுகிறது. முதலில் நிலத்தில் விதை மட்டும் விதைத்தோம். தற்போது பிளாஸ்டிக் என்ற எமனை சேர்த்து புதைப்பதால் நிலத்தில் மலட்டுத்தன்மை ஏற்பட்டு விட்டது. தொழிற்சாலை கழிவுகளில் இருந்து வெளியேறும் நச்சு விஷத்தன்மை மண்ணையும் நீரையும் ஒரு சேர நாசமாக்குகிறது. பிளாஸ்டிக், பாலிதீன் பைகளை விளை நிலங்களில் கொட்டுவத...
குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி வேண்டுமா?*
- Get link
- X
- Other Apps
*குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி வேண்டுமா?* ஒவ்வொருவருக்கும் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும். அந்த பிரச்சினைகளை மீறி மனதை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், நிறைவாகவும் வைத்துக் கொள்வது என்பது சாதாரண விஷயமல்ல. நல்ல குடும்ப சூழல் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். புரிந்து கொள்ளும் கணவன், ஆதரவான மனைவி, அன்பான குழந்தைகள், விட்டுக் கொடுக்கும் மூத்தோர்கள் இருந்தால் மட்டுமே குடும்பம்... குடும்பமாக இருக்கும். குடும்பம் என்பது ஒரு மனிதனுள் பின்னிப்பிணைந்தது. மனிதனுக்கு குடும்பமே முக்கியம். அவனுக்கு பெற்றோர், மனைவி, குழந்தைகள், அண்ணன், அக்கா, சித்தப்பா, அத்தை, மாமா என அவனது உறவுகள் நீண்டு கொண்டே செல்லும். ஒரு குடும்பத்தின் முழு பொறுப்பும் அதில் உள்ள அனைத்து நபர்களையும் சாரும். இதுதான் அந்த குடும்பத்தினை மகிழ்ச்சியாய் வாழ வைக்கும். ஒரு மனிதனுக்கு தன் மகிழ்ச்சியினை, துக்கத்தினை பகிர்ந்து கொள்ள நெஞ்சுக்கு நெருக்கமான ஆள் வேண்டும். அது தான் குடும்பம். தனியாக வாழும் ஒரு மனிதனை விட குடும்பத்தோடு வாழும் மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதினை அன்றாட வாழ்வில் நாம் காணலாம். கூட்டு குடும்பத்தில் வளரும் குழந்தைகள் சமுதா...