புரிந்துணர்வு ... Category: கவிதை

 

 

131524677 713410156046254 6327404029326155274 nபுரிந்துணர்வு என்பது பொக்கிசம்.

பொக்கிசங்கள் அடைந்தவர்கள் பாக்கியவான்கள்*

புலப்படுகிறார்கள் கண்களுக்குத் தெய்வங்களாக,

புண்பட்டவர்களை புத்துணர்வாக்கிப் புரிய வைக்கிறார்கள் நிஜங்களை*

புதிய வாழ்வைப் புத்துணர்ச்சியுடன் தருகிறார்கள்*

புரிதல்கள் தொடரட்டும்.

புண்பட்டோரும் வாழட்டும்.

#####£########

புரிதலற்றோர் என்போர்

புண்பட்டோரை மொய்க்கும். புழுக்களே***

புது விதமாய் வர்ணித்தால்

மனித உருவிலான மாய நாகங்களே***

பிணங் கொத்திக் கழுகுகளாய்

பிறர் மனம் கொத்தி மகிழும் அற்பர்களே***

இரண்டு பேதங்களையும்

மனிதனுக் கொடையாகக் கொடுத்த இறைவனே,

உனக்கு ஏன் வஞ்சகம்?

போற்றுதலை ஏற்கும் இறைவா

தூற்றுதலையும் ஏற்றுவிடு***

புரிந்துணர்வற்றவர்களையும் படைத்தவன் நீ.

என்பதால் தூற்றல்களும் உனக்கேயுனக்காய்.

Comments

Popular posts from this blog

வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும்!

ஊர்ந்து கொண்டிருந்தது.