Posts

Showing posts from January, 2021

அபூதாபி டி10 தொடரின் இன்றைய

Image
*T10 League 4th Match Pune Devils vs Qalandars Live Streaming.* அபூதாபி டி10 தொடரின் இன்றைய மூன்று போட்டியையும் ஒரே நேரலையில் பார்வையிட இணைந்திடுங்கள். 👇👇👇 https://www.facebook.com/110325207412634/posts/231467851965035/?sfnsn=mo

உழைப்பின்றி உயர்வில்லை

Image
  உழைப்பின்றி உயர்வில்லை உயிரினங்களுக்குள் உழைத்து வாழ்பவன் மனிதன். உழைப்பு இல்லையெனில் உயர்வு இல்லை. ஊக்கமும், இடைவிடா முயற்சியுடன் உழைப்பவன் எதிலும் வெற்றி பெறுவான். உழைப்பு உயர்வு தரும். ஒருவன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்புடன் செய்ய பாடுபடுவதே உழைப்பு. எந்த ஒரு மனிதனும் தன் வாழ்க்கை, ஒரு நல்ல பாதையில் செல்ல வேண்டும் என விரும்பினால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். எந்தளவிற்கு உழைக்கிறோமோ அந்தளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும்.அத்தகைய உழைப்பை நாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் வெற்றி நமக்கு தான். சிலர் வாழ்வில் முன்னேற வேண்டும் எனக் கூறிக்கொண்டு இருப்பார்கள். ஆனால், அவர்களிடம் செயல்பாடு எதுவும் இருக்காது. அதற்கு காரணம் உழைக்கும் நோக்கமே அவர்களிடம் இல்லாமல் இருப்பது தான். செயல்படுத்தும் உழைப்பு நாம் ஒரு செயலை எண்ணுவதை விட, அதை செயல்படுத்துவதற்காக அதிகளவில் உழைக்க வேண்டும். அந்த உழைப்பிற்கு பலன் நிச்சயம். எந்த ஒரு செயலும் உழைப்பினால் தான் சிறப்பு அடைகிறது. வெற்றியை உருவாக்குவதில் உழைப்பு மிகப் பெரிய மூலதனம் ஆகும். அறிவு சார்ந்த உழைப்பு என்பது முடியாததை கூட நம் கையில் கொண்டு ...

வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும்!

Image
வாசிப்பு           மனிதனைபூரணப்படுத்தும்! வாசிப்பு என்பது வெறும் புத்தகங்களை மட்டும் கற்பதல்ல.   புத்தகம் மனிதனின் சிறந்த நண்பன். ‘கண்டது கற்க பண்டிதனாவான்’ எனும் முதுமொழி இதனை பறைசாற்றுகிறது.  வாசிப்பு இல்லாமல் கற்றல் எனும் செயற்பாடே நிறைவு பெறாது. ஒரு சிறந்த வாசகனால் மட்டுமே சிறந்த எழுத்தாளனாக  முடியும். ஒரு சிறந்த எழுத்தாளனால் மட்டுமே சிறந்த பேச்சாளனாக முடியும். ஆகவே மனித தொடர்பாடலின் மையப்புள்ளியே வாசிப்பு ஆகும். எவன் ஒருவன் வாசிக்காதவனாக இருக்கிறானோ அவன்   மனதில், அறிவில், அறியாமை இருள் படிந்திருக்கும். வாசிப்பு என்பது ஒரு மனிதனின் குழப்பமான மனநிலையை அகற்றி நன்னிலைப்படுத்த உதவுகிறது. இதேபோன்று புதிய  விடயங்கள் மனதில் இடம்பிடித்துக் கொள்வதற்குரிய சந்தர்ப்பத்தை வாசிப்பு ஏற்படுத்துகிறது. மேலும், நல்ல நூல்கள் எமக்கு சிறந்த வழிகாட்டியாக  அரவணைக்கும் தாயாக, தைரியமூட்டும் தந்தையாக கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் நண்பனாக பல்வேறு பாத்திரங்களை வகிக்கின்றது. ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை  மூடப்படுகிறது! ...

Sri lanka headline news

Image
 

வெற்றியின் ரகசியம்...!

Image
  வெற்றியின் ரகசியம்...!   எப்போதும் போல, எல்லோரையும் போல யாரும் இருந்துவிட முடியாது. இருந்துவிடவும் கூடாது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது எனும்போது, மாற்றம் பெறாத எதுவும், வித்தியாசமாக இல்லாத எவருடைய வாழ்வும் அத்தனை வரவேற்பைப் பெறாது. வந்து போவதில் என்ன இருக்கப் போகிறது என்று வித்தியாசமாக இருப்பவர்களே செய்தியிலும், சரித்திரத்திலும் இடம்பெறுகின்றனர். எப்போதோ படித்தது. ஆப்பிரிக்காவில் அத்தனை அதிகமாய் நாகரிகம் பரவாத நேரம். பிரபலமான செருப்பு நிறுவனம் தன் காலணிகளை அங்கே சந்தைப்படுத்துவதற்காக ஒரு விற்பனைப் பிரதிநிதியை அனுப்புகிறது. போனவன் திரும்பிவந்து தந்த பதில், “அங்கே யாருமே செருப்பு அணியாதபோது, எப்படி செருப்பு விற்பது?” சில மாதங்களுக்குப் பிறகு வேறு ஒரு இளைஞன் சென்றிருக்கிறான். சென்றடைந்த சில நாள்களுக்குள் ஆயிரக்கணக்கான செருப்புகளைத் தருவித்துக் கொண்டதோடு, செருப்பு அணிவது எத்தனைப் பாதுகாப்பானது என்பதை அங்குள்ள மக்களுக்குச் சொல்லிக் கொடுத்ததோடு, சிலருக்கு இலவசமாகவும், சிலருக்குக் குறைந்த விலையிலும் விற்றுச் சந்தைப்படுத்த தொடங்கியதைக் கூறுகிறான். இதுதான் வித்தியாசமாக சிந்திப்பதென்பது...

லேட்டஸ்ட் குழந்தை வளர்ப்பு முறைகள்

Image
லேட்டஸ்ட் குழந்தை வளர்ப்பு முறைகள் குழந்தைகள் வளர்ப்பு முறைகள் தெரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு குழந்தைகளை வளர்க்க முற்பட்டால், நீங்கள் நினைத்தவாறு உங்கள் குழந்தை புத்திசாலியாகவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வளர ஆரம்பித்துவிடும். இதற்கு ஒரு சில குழந்தை வளர்ப்பு முறைகளை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த கட்டுரையில் குழந்தை வளர்ப்புக்கு தேவையான ஒரு சில பயன்மிக்க குறிப்புகள் மற்றும் ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. கரு உருவாக ஆரம்பிப்பதிலிருந்தே குழந்தை வளர்ப்பும் தொடங்கிவிடுகிறது. புதியதாக இதை படிப்பவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. கரு உருவான முதல் வாரத்திலேயே குழந்தையின் மூளை உருவாக ஆரம்பித்துவிடுகிறது. அதற்கடுத்து இருபதாவது வாரத்தில் நன்றாக கேட்கும் சக்தியையும் பெற்றுவிடுகிறது குழந்தை.  கேட்கும் சக்தியைப் பெற்ற குழந்தையால் கற்ப பையில் இருந்தாவாறே வெளியில் தாய் கேட்கும் குரல், ஒலிகளை சிசுவும் கேட்க முடியும்.  இதனால்தான் கர்ப காலத்தில் பெண்கள் நல்லதையே கேட்க வேண்டும். நல்ல சூழலில் இருக்க வேண்டும், நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் என சொல்கிறார்கள். தாயிடமிருந்து பெரு...

குடும்ப உறவு

Image
 குடும்ப உறவு குடும்ப வாழ்க்கை பலவீனமடைகிறதா ? வாழ்க்கை உறவுகளின் மீது கட்டப்பட்ட புனிதமான ஆலயத்தைப் போன்றது. இந்த ஆலயம் சிதிலமடைகையில் மனித மாண்புகளும், வாழ்வின் புரிதல்களும் அர்த்தமிழந்து போகின்றன. உயரிய பண்பாடுகளினாலும், அடர்த்தியான கலாச்சார வாழ்க்கை முறையினாலும் உலகின் கவனத்தைக் கவர்ந்த இந்திய குடும்ப வாழ்க்கை முறை சமீபகாலமாகச் சரிவடையத் துவங்கியிருப்பது குடும்ப உறவு முறையில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிருக்கிறது. பலவீனமான குடும்ப வாழ்க்கைக்கு மேற்கத்திய நாடுகளை உதாரணம் காட்டிய நிலை இன்று மாறி அடுத்த வீட்டு வாசலை நோக்கி விரல் நீட்டும் நிலை உருவாகி வருகிறது. விவாகரத்து விண்ணப்பங்களோடு வழக்கறிஞர்களைச் சந்திக்கும் நகர்ப்புறவாசிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக என்னுடைய வழக்கறிஞர் நண்பர் ஒருவர் புள்ளி விவரங்களோடு விளக்கி அதிர்ச்சியளித்தார். ஆழமாய் சிந்திக்கையில் பெரும்பாலான விவாகரத்துக்கள் மிகவும் சாதாரண காரணங்களுக்காகவே கோரப்படுகின்றன. மிக மிக முக்கியமான காரணம் கணவன் மனைவியரிடையே இன்றைக்கு குறைந்து போயிருக்கின்ற உரையாடல்கள். மாலை நேரங்களில் ஒன்ற...

பொய் நிறைந்த உறவுகள்

Image
  பொய் நிறைந்த உறவுகள் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு உறவுகளிடமும் உண்மையை தேடி தேடி உண்மையான உறவென்று எண்ணி எண்ணி என்னிதயம் ஏமாற்றம் கண்டு கண்டு அனைத்தும் பொய் பொய் என்றே எண்ணுகிறது ....... வெறுத்து விடுகிறேன் இறுதி வரை உறவுகள் நிலைத்து நிற்பதில்லை ....... கோபத்தில் ஏமாற்றங்களில் வலிகளில் என்னையே நான் வெறுத்துவிடுகிறேன் மொத்தமாய் ....... சரியோ தவரோ எனக்கான உறவுகளிடம் உண்மையுடன் பழகுகிறேன் ...... அதை என்னை சார்ந்த உறவுகளிடம் எதிர்ப்பார்ப்பதால் ஏமாற்றம் காண்கிறேன் ....... வெறுத்து விட்டேன் ..... இன்று மொத்தமாய் ...... நேசித்த உறவை .....

Lifestyle poems

Image
 

பள்ளிவாசல் இமாம் திருடனா???

Image
 பள்ளிவாசல் இமாம் திருடனா??? ரமழான் மாதத்தில் ஒரு நாள் ஒரு குடும்பத்தினர்  தமது ஊர் பள்ளிவாசல் இமாமை நோன்பு திறப்பதற்காக தமது வீட்டுக்கு அழைத்தனர். அவ்வீட்டுப் பெண்மனி உணவுமேசையை தயார்படுத்தும் வேளை அதில் காணப்பட்ட தனது கணவரின் பெரிய தொகைப் பணத்தை எடுக்க மறந்து விட்டாள். நோன்பு திறந்து முடிந்து பள்ளிவாசல் இமாம் திரும்பிச் சென்றதும் மனைவி மேசையின் மீது காணப்பட்ட பணத்தைத் தேடிய போது அதை அவள் காணவில்லை. அவளுக்கு எந்தவொரு பிள்ளைகளும் கிடையாது. அன்றைய தினம் நோன்பு திறப்பதற்காக அவர்களது வீட்டிற்குச் சமூகமளித்த ஒரே மனிதர் இமாம் மாத்திரமே. இமாம் அவர்கள் மீது சந்தேகப்பட்ட மனைவி தனது கணவரிடம் விடயத்தைக் கூறி அவரிடம் பேசும் போது இது சம்பந்தமாக வினவுமாறு வேண்டினாள்.  கணவன் " இது ஒரு குறை. எமக்கு அவருடன் இனிமேல் எந்தத் தொடர்பும் இல்லை" என்று கூறினான். அது மாத்திரமன்றி கணவன் பள்ளிவாசலில் அந்த இமாமிற்குப் பின்னால் தொழுவதை யும் விட்டுவிட்டான். இவ்வாறே நாட்கள், மாதங்கள் என்று காலம் செல்கிறது. அடுத்த ரமழான் மாதம் உதயமாகிய போது கணவன் தனது மனைவியிடம் " நாம் கருணை, பாவமன்னிப்புடைய மாதத்தில் ...

வாழ்ந்து காட்டுவோம்

Image
வாழ்ந்து கட்டுவோம் ● *பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது. ● ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது. ● பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன. ● மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன. ● ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன. ● சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன. ● தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன. ● ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும்,அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன. ● இப்படிப் பல கோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் நம்மால் வாழ முடியாதா..? ...

இன்றைய சிந்தனை வரிகள்*

Image
*இன்றைய சிந்தனை வரிகள்* ▪️எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான்... எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்... எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்... இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம்... ▪️வாழ்க்கையும் இதே மாதிரி தான்... ▪️நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்... ▪️அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்... ▪️சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை... தீர்வு இல்லாத பிரச்சினைகளை இயற்கையும் அனுமதிப்பதில்லை...*

Child tamil speech

Image
 

Child amazing Arabic bayan

Image
 

பாதத்தில் வெங்காயத்தை கட்டிக்கொண்டு தூங்கினால் என்னவாகும்?

Image
  பாதத்தில் வெங்காயத்தை கட்டிக்கொண்டு தூங்கினால் என்னவாகும்? வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால் என்னவாகும் என் தெரிந்துக்கொள்ளுங்கள்...    வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால்,  இதய நோயில் இருந்து விடுபடுவதோடு கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்கும்.   முக்கியமாக வயிற்றுப் பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள், குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும்.   சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுவராயின், வெங்காயத்தை இரவில் படுக்கும்போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகும்.   இரவில் படுக்கும்போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவதால் உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது.   வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு பாக்டீரியாக்களை  அழிக்கும்.   வெங்காயத்தில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில...

சிலசில நேரங்களில் முடிவுகளை எடுப்பதற்கு மிகவும் தயக்கமாக உள்ளதா ?

Image
* சிலசில நேரங்களில் முடிவுகளை எடுப்பதற்கு மிகவும் தயக்கமாக உள்ளதா ? எடுக்கும் முடிவு சரியானதா/ பிழையாகி  விடுமோ என்ற பயம் ஏற்படுகிறதா ?*  சில நேரங்களில் நாங்கள் எங்கள் மிக முக்கியமான கனவுகளைத் தொடர/ முடிவுகளை எடுக்க  பயப்படுகிறோம், ஏனென்றால் இதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என பயப்படுகின்றோம்  , எங்கள் குடும்பத்தினரையோ நண்பர்களையோ எமது முடிவுகள் திருப்பதி அடையச் செய்யாமல் இருந்து விடுமோ என்ற பயம் , இவ்வாறான உணர்வுகளின் விளைவுதான் என்ன ? இவ்வாறான சிந்தனை போராட்டம் எமது உணர்வுகளுக்கு நாம் அளிக்கும் அதிருப்தி ஆகும்  சில முடிவுகளின் போது . “அவர்கள் சிரிப்பார்கள்,என்ற உணர்வும்  ” “உங்களால் அதைச் செய்ய முடியாது,” “நீங்கள் நிபுணர் அல்ல” என்ற மற்றவர்களின் எதிர்மறையான சிந்தனைகளும்  அல்லது “மோசமான ஒன்று நடந்து விடுமோ ."என்ற எமது பய உணர்வும் எம்மை ஆட்கொள்ளும் . இங்குதான் நம் பயங்களுக்கும்  நம்முடைய உள் உணர்விற்கும் இடையில்  உள்ள வித்தியாசத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். நமது உள் உணர்வு  ஒருபோதும் கொந்தளிப்பு அல்லது குழப்பத்தை ஏற்படுத்தாது....

Lifestyle Motivations

Image
 

இன்றையசிந்தனை வரிகள்*

Image
  *இன்றைய சிந்தனை வரிகள்* ஊரே பகையானாலும். உலகமே உங்களை வெறுத்தாலும் வினை வந்து சூழ்ந்தாலும் விஷம் உண்ண தந்தாலும்...... நட்பே துரோகமாய் ஆனாலும் நடு முதுகில் குத்தினாலும். எதை நீங்கள் பெற்றாலும்... எதை நீங்கள் இழந்தாலும்.... *இது இறுதியானது அல்ல* என்று மட்டும் நம்புங்கள். இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது.... முடிவுகளைத் தான் கவனிக்கும்..... விழும் வேகத்தை விட , எழும் வேகம் அதிகமாக இருந்தால்.. தோற்கடிக்க அல்ல... உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான். நாம் இங்கே யாரையும் திருப்திப்படுத்த வரவில்லை..... மாறாக நாம் நம்மோடு திருப்தியாக இருக்கவே வந்திருக்கோம்..... அதற்காகவே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றோம்... நீங்கள் உங்களில் அனுபவிக்கும் திருப்தி..... உங்கள் உள்ளத்திலும், முகத்திலும், செயலிலும்... தானே வெளிப்படும்... உங்களை நீங்களே உணர்ந்தால். அதற்காக யாரையோ திருப்திபடுத்துகிறேன் என்று..,. உங்கள் இயல்பை தொலைத்து முயலும்போது.... அது உங்கள் திருப்தியைத் தான் முதலில் பாதிக்கும். நீங்களே திருப்தியடையாத போது..... யாரை திருப்திபடுத்தி என்ன செய்யப் போகிறீர்கள்....??? உங்களுள் நீங்கள் அடையும் தி...

Vivo y21

Image
 

கோவம் - நல்லது.!

Image
  *கோவம்* கோவம் - நல்லது.! கோவம் மனதிற்கு மருந்து. கோவத்தை மனதிற்குள் அடக்காமல், வெளிப்படுத்தி ஆரோக்கியமாக வாழுங்கள்..! இப்படி நான் சொல்வது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் இப்பதிவை முழுவதுமாகப் படித்து முடிக்கும்போது உங்களுக்கு உண்மைப் புரியும். எதனால் நமக்கு கோவம் வருகிறது ? ஒருவகையான மன அழுத்தத்தின் விளைவே கோவம். ஆனால் கோவம் ஒரு மருந்து என்றால் நம்புவீர்களா?! ஆம், குக்கரில் சேப்டி வால்வ் (safety valve) என்று ஒன்று இருக்கும். அதன் நோக்கம் என்ன தெரியுமா? உள்ளே தேவையற்ற (அளவுக்கு அதிகமாக) பிரஷர் (pressure) ஏற்படும் போது குக்கர்(cooker)  வெடித்துவிடாமல் இருக்கத்தான் இந்த safety value. இதன் வழியே உள்ளே உள்ள ஆவி வெளியாகி குக்கரை காப்பாற்றும். இதே போலத்தான் மின்சாதனம் பழுதாகமல் இருக்க ஃபீயூஸ் வயர் (fuse wire). இதை புரிந்து கொண்டீர்களானால் கோபத்தை புரிந்து கொள்ளலாம். நாம் மனதில் சொல்ல முடியாத பிரச்சனைகளுடன் உழண்று கொண்டிருப்போம். சமூக, சூழல் காரணமாக நாம் அவற்றை வெளிப்படுத்த முடியாமல் அடக்கி வைத்திருப்போம். இந்த அழுத்தம் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் போது கோவமாக வெளியெறும்போது, ...

யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்டார் ஜனாதிபதி? எச்சரித்த பௌத்த அமைப்பு

Image
  யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்டார் ஜனாதிபதி? எச்சரித்த பௌத்த அமைப்பு https://www.tamilwin.com/politics/01/266557?ref=imp-news

Horowpothana muslim school hostel prajocte

Image
 

Thathuvam

Image
 

Lovebirds

Image
 

Yamaha&FZ

 https://www.pricelanka.lk/yamaha-fz-price-in-sri-lanka/

உங்கள் குழந்தையின் கோபத்தை எவ்வாறு கையாள்வது ?*

  *உங்கள் குழந்தையின் கோபத்தை  எவ்வாறு கையாள்வது ?* பெற்றோர் என்ற வகையில் கோபத்தை சமாளிக்க உங்கள் குழந்தைகளுக்கு உதவுவதில் பெற்றோர்கள்  இளைக்கும் தவறு என்ன ?  பகுதி 1 கோபத்துடன் இருக்கும் குழந்தைகளை சமாளிக்க பெற்றர்கள் 2 வகையில் செயற்படுகின்றார்கள் .உடனே அந்த கோபத்தை நிறுத்த முற்படுகின்றார்கள் அல்லது அவர்கள் அந்த கோபத்தினால் விரக்தி அடைந்து போகின்றார்கள்.  பெற்றோர்கள் புரிந்து கொள்ள  வேண்டிய விடயம் யாதெனில்  குழந்தைகளுக்கு  காலணிகளைக் அணிவதற்கோ  அல்லது பல் துலக்கவோ கற்றுக் கொள்ள உதவி தேவைப்படுவது போல, அதன்  கோபத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதைக் கற்றுக்கொள்வதற்கும் குழந்தைகளுக்கு  உதவி தேவை. கோபத்தை சமாளிக்க ஒரு குழந்தைக்கு உதவுவதற்கு முன்பு பெற்றோர்கள்  தெரிந்து கொள்ள வேண்டியது குழந்தைகளுக்கான கோப நிர்வாகத்தை வழிநடத்துவது மிகவும் சவாலான ஒரு விடயமாகும் . பல்வேறுபட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடுதான் கோபம்  கோபம் மனிதர்களுக்கு / உயிர்வாழும் உணர்ச்சியாக செயல்படுகிறது, இது சாத்தியமான அச்சுறுத்தலைக் குறிக்கிறது, மற்றவர்களுடன் தொடர்ப...

LOVE

 அன்பு அன்பு குறைந்து இருக்கும் போது சின்ன தும்மல் கூட பெரிய குற்றம் போல் தோன்றும்.

தமிழ் தத்துவம்

 அரிசி என்றாலும் அரசியல் என்றாலும் களையெடுப்பது அவசியம் அதிக சந்தோஷத்தை கொடுத்ததும் முகநூல் பல வலிகளை கொடுத்ததும் முகநூல்... வானிலையைவிட அதி வேகமாய் மாறுகிறது மனிதனின் மனநிலை... காப்பாற்ற வேண்டிய நேரங்களில் ஓய்வெடுக்க போய்விடுகிறார் கடவுள்... புன்னகை அவ்வப்போது பொய் பூசிக்கொள்கிறது... பொய்யும் அவ்வப்போது புன்னகை பூசிக்கொள்கிறது... மனித மனங்களிலிருந்து மனிதநேயம் மட்டும் தான் இன்னும் எட்டாத தொலைவில் இருக்கின்றது... மனதை சுத்தப்படுத்த ஒருநொடி போதும் அந்த ஒருநொடியை செலவு செய்யத்தான் நமக்கு மனமில்லை... கஸ்டங்கள் கவலைகள் உனக்கு மட்டும் தான் என்று புலம்பாதே இங்கு சந்தோஷத்தை மட்டும் அனுபவிக்கும் மனிதர் எவருமில்லை... எங்கு உனக்கு கேள்வி கேட்க உரிமையில்லையோ அங்கு நீ அடிமைபடுத்தப்படுகிறாய்... இதயத்தின் காயங்கள் எல்லாம் இணையத்தில் கிறுக்கல்களாக... அடுத்த நொடி நமக்கு சொந்தமில்லாத போது நீயா நானா என்ற போட்டி பொறாமைகள் எதற்கு... விதியை மதியால் வெல்லலாம் என்று எவ்வளவு முயற்சி செய்தாலும் பல நேரங்களில் விதிதான் வெல்லுது... நம் பிரச்சனைக்கு மற்றவர்களால் ஆறுதல் மட்டுமே தரமுடியும்..... அதற்கான தீர்வு நம...